Monday, January 30, 2006

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2

கடந்தப் பதிவு



தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன்

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

அமெரிக்காவை நோக்கி நகர்ந்த இலங்கையின் பார்வை தவிர 1980களில் வேகமாக வளர்ந்த இலங்கையின் பொருளாதாரமும் இந்திய உளவு நிறுவனமான ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் மத்தியில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இருந்த ரா, இலங்கை மீது தன் கவனத்தை திருப்பியது.

இலங்கையில் அப்பொழுது நிலவிய சூழலும் ராவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்

- ஒன்று இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனை தமிழகத்தை அப்பொழுது தொந்தளிக்கச் செய்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமான நிலையை அன்று இந்தியா எடுத்திராவிட்டால் தமிழகத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் வெடித்திருக்கும்.

- மற்றொன்று இலங்கை பாக்கிஸ்தான் - அமெரிக்கா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம். அவ்வாறு சாயும் பட்சத்தில் இலங்கையில் நிலை கொள்ளக் கூடிய அமெரிக்கப் படைகள் இந்தியாவிற்கு தெற்கில் ஒரு நிரந்தர தலைவலியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டுமானால் அந் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை குறைப்பதும் முக்கியமானது என ரா கருதியது.

எனவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதில் இந்தியாவிற்கு பல நன்மைகள் இருந்தன. இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலமாக மிரட்டலாம். இலங்கையில் தீவிரவாத பிரச்சனையை வளர்ப்பதன் மூலம் அந் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் இந்தியா ஈழத் தமிழர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளதாக காண்பிக்கலாம்.

இந்தியா தனது இந்த நோக்கத்தில் வெற்றியை பெற்றது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் அதே வேளையில் தமிழ் ஈழம் அமைந்து விடக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. அதற்கு காரணம் இலங்கை இரண்டு துண்டாகும் பட்சத்தில் அதில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராகவே இருக்கும் என்ற அச்சம். உலகச் சூழ்நிலையும் அவ்வாறு தான் இருந்தது. சோவியத் யுனியன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையே ஒரு நாட்டுடன் சார்பு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அன்றைக்கு பல நாடுகளுக்கு இருந்தது.

இவை தவிர தமிழ் ஈழம் அமைந்தால் தமிழகத்தில் அது போல தீவிரவாதம் எழக் கூடும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த தமிழ் மொழி உணர்வும் அதற்கு ஒரு காரணம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது.

"Inter-state relations are not governed by the logic of morality. They were and they remain an amoral phenomenon.."

இலங்கைப் பிரச்சனையில் குட்டையை குழப்பியவர்களில் முக்கியமானவரான ஜெ.என்.தீக்ஷத் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுதும் பொழுது இப்படித் தான் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் நியாயம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது தான் தீக்ஷ்த்தின் வாதம். இந்தியா, இலங்கை பிரச்சனையில் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வாறு நியாயத்திற்கு புறம்பாக இருந்தது என்பதற்கு இதை விட வேறு யாரும் ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது.

இலங்கை அரசுக்கு எதிர் நடவடிக்கையாக, இலங்கை அரசுக்கு பிரச்சனை கொடுக்கும் பொருட்டும், தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக மட்டுமே இலங்கை போராளி குழுக்களுக்கு இந்தியா ரா மூலமாக பயிற்சி அளிக்க தொடங்கியது. இதில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா முயற்சி எடுத்தது என்பதெல்லாம் வெளிவேஷம். தமிழகத்து மக்களை நம்ப வைக்க போடப்பட்ட வேடம். இப் பிரந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர் என்பது தான் உண்மை. அது தான் ஜெ.என்.தீக்ஷத் கூறும் amoral phenomenon.

இலங்கை போராளிக் குழுக்களை தங்களுடைய கூலிப்படைகளாக மாற்றுவது, இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வருவது, இந்து மகா சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் தான் மட்டுமே வல்லரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இங்கு இடமில்லை என்பதை வெளிக்காட்டுவது இவையே இந்தியா 1980களில் இலங்கை விஷயத்தில் கொண்ட கொள்கை.

இந்தியா அனைத்து போராளிக் குழுக்களையும் தன்னுடைய கூலிப்படைகளாவே மாற்றியது. மாலத்தீவில் ரா மேற்க்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டது. ராவின் செல்லப் பிள்ளைகளாக ஈழப் போராளிக் குழுக்கள் மாறின.

ஆனால் இந்தியாவின் எண்ணம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும், அதன் தலைவர் பிரபாகரன் விஷயத்திலும் தவறாகிப் போனது. இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் பொழுது கூட விடுதலைப் புலிகள் தங்கள் சொல்படி கேட்கும் கிளிப் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ரா எண்ணியது. அப்போதைய ரா அமைப்பின் தலைவர் வர்மா, ராஜீவ் காந்தியிடம் "these are boys whom we know and with whom we have been in touch and so they will listen to us" என்று கூறினாராம் (Assignment Colombo - By JN Dixit)

அவ்வாறு இல்லாமல் எதிர்த்தாலும் எளிதில் நசுக்கி விடலாம் என்று ரா கருதியது.

ஆனால் இந்தியாவின் எண்ணம் நிறைவேற வில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பதை வெளிப்பூச்சாக பேசுவதில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவது என்ற உறுதியான நிலையை எக் காலத்திலும் பிரபாகரன் சமரசம் செய்து கொண்டதில்லை. தன்னுடைய அதே உறுதிப்பாட்டுடனே தமிழ் ஈழத்தை அடையும் லட்சிய வேட்கையுடனே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களையும் அவர் உருவாக்கினார்.

விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெ.என்.தீக்ஷ்த்தே அவரது Assignment Colombo என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்

The LTTE's emergence as the most dominant and effective politico-military force representing Tamil interests was due to the following factors:

First, the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

Secondly, he has created a highly disciplined, and dedicated cadres, a manifestation of which is inherent in what is called the 'cyanide cult.' Each regular member of the LTTE carries a cyanide pill and is pledged to committing suicide rather than being captured by the enemy.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

The fourth factor has been the LTTE's ability to upgrade its political and military capacities including technological inputs despite the constraints imposed on it by Sri Lankan forces and later by India.

The fifth factor is a totally amoral and deadly violent approach in dealing with those the LTTE considers as enemies.

The sixth factor is Prabhakaran's success in gathering around him senior advisers with diverse political, administrative and technological capacities, which contributed to effective training of his cadres, optimum utilisation of the military equipment which he had, and the structuring of an efficient command and control system.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.

...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

விடுதலைப் புலிகள் இயக்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் ஈழத்திற்காக சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழத்திற்கான பாதையில் எதிர்ப்பு வந்த பொழுதெல்லாம் அதனை எதிர்த்தே போரிட்டிருக்கிறார்கள். அனிதா பிரதாப்பிற்கு ஆரம்ப காலங்களில் அளித்த பேட்டிகளில் பிரபாகரன் ஒன்றை தெளிவு படுத்தியிருந்தார்.

நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம் என்று அனிதா பிரதாப்பிற்கு 1984ல் அளித்த பேட்டியிலேயே பிரபாகரன் கூறியிருந்தார். இது 1984ல் நிலவிய சூழலில் அனிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார்.

இந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிராக மாறிய பொழுது இந்தியாவை எதிர்த்து போரிடவும் பிரபாகரன் தயங்கவில்லை. நாளை அமெரிக்கா தன்னுடைய படைகளை களமிறக்கினாலும், அமெரிக்காவை எதிர்ப்பார். ஏனெனில் தமிழ் ஈழம் என்பது அவருக்கு deep -rooted, non-negotiable convication.

இந்தியாவிற்கு தன்னுடைய இறையான்மை, பாதுகாப்பு போன்றவை முக்கிய நோக்கமாக இருப்பதால் தமிழ் ஈழத்தை எதிர்த்து.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.

அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இலங்கையுடன் தமிழர்களுக்கான ஒப்பந்தம் என்ற போர்வையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தின

இவையனைத்துமே தமிழ் ஈழத்திற்கு எதிராகவே கடந்த காலங்களில் அமைந்தன. பிராந்திய வல்லரசும், உலக வல்லரசும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.

ஆனால்.....

தற்பொழுது உலக நிலை மாறி வருகிறது. கொள்கைகளும் மாறி வருகின்றன. நாடுகளின் வெளியுறவு கொள்கை மாறி வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார இணக்கம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையிலும், அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்படுமா ?

கடந்த காலங்களில் பிராந்திய முக்கியத்துவமுள்ள பகுதியாக இருந்தது போன்று இலங்கை இப்பொழுதும் இருக்கிறதா ?

விடுதலைப் புலிகளின் நோக்கம் சமரசத்திற்கு இடமில்லாத தமிழ் ஈழம் மட்டுமே. தமிழ் ஈழத்தை பிரபாகரனால் அமைக்க முடியுமா ?




அடுத்தப் பதிவில்

5 மறுமொழிகள்:

Thangamani said...

வழமைபோல உங்களின் இந்தப்பதிவும் நடுநிலையாய் செல்லுகிறது. ஜெ.என்.தீக்ஷதின் வரிகளை சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது என்று குறிப்பிடுகிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. இந்திய மீனவர்கள் பாக் நீரிணைப்பில் தொடர்ந்து கொல்லப்படுவதையும், கொழும்புவின் மற்ற இந்திய விரோத நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளமல் கொழும்பை ஆதரிப்பதும், தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதும் இந்தியாவின் நலனை முன்வைத்து செய்யப்படுகிறது என்று எவ்வாறு புரிந்துகொள்வது? அதை இந்தியாவின் நலனைவிட (அல்லது அதை காவு கொடுத்தாவது) தமிழரின் அழிவே பிரதானமாக நடக்கவேண்டும் என்று விரும்புகிற சக்திகளின் வேலைத்திட்டம் என்றே நான் புரிந்துகொள்கிறேன். கொழும்பும் இதைச் சரியாகவே புரிந்துகொண்டு இந்தியாவின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது.

12:08 AM, January 31, 2006
ஈழநாதன்(Eelanathan) said...

சசி முன்னைய பதிவுகளைப் போன்று தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.திருகோணமலையில் இருக்கும் துறைமுகம் மற்றும் எண்ணெய்க்குதம் ஆகியவற்றை வைத்து அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் பகடையாட விரும்புகிறது இலங்கை அரசாங்கம்.ஏறத்தாழ சுனாமி வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் திரும்பிச் சென்றதாகத் தகவல் இல்லை அவர்கள் எதற்காக இன்னமும் அங்கே முகாமிட்டிருக்கவேண்டும் என்ற கேள்வி இந்தியப் பத்த்ரிகைகளுக்கு எழாதது ஆச்சரியம்.

கடந்த வாரம் நோர்வேயுடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழீழத்தின் வெளியுறவுக்கொள்கைகள் பற்றிய அறிவிப்பை பிரபாகரன் வெளியிட்டிருக்கிறார்.சமீபத்தில் பேசப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைமுயற்சிகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்குப் பதில் சொல்வதாக அது இருக்கும்

12:23 AM, January 31, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

தங்கமணி, ஈழநாதன் - நன்றி

தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

குறிப்பாக "தமிழினத்தலைவர்" கலைஞரின் பதவி, அதிகார ஆசை. அதனால் பல கொள்கைகளில் செய்து கொண்ட சமரசம். இவையும் மைய அரசு தமிழர்களைப் பற்றி கண்டுகொள்ளாமைக்கு முக்கிய காரணம்

12:04 AM, February 01, 2006
Machi said...

எல்லா அரசுகளும் தன் ஆதாயத்தைதான் முன்னிறுத்தி தான் செயல்படும். இந்தியாவின் பிரச்சனை என்னவென்றால் பிரச்சனையின் தன்மையை உணராதவர்கள் பிரச்சனையை கையாளுபவர்களாக இருப்பது மற்றும் துறை சாராதவர்கள் துறையை நிர்வகிப்பது. அவர்களின் முடிவுகள் சிக்கலை தீர்ப்பதிற்கு பதில் சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.

/* "தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கும் ஒரு காரணம் என்று சொல்லலாம்." */
நன்றாக சொன்னீர்கள்.

8:11 PM, February 02, 2006
சயந்தன் said...

வணக்கம். உங்களுடைய புலிகளும் இந்திய பாதுகாப்பும் கட்டுரைத்தொடரை ஒஸ்ரேலியாவில் இயங்கும் வானொலி ஒன்றின் செய்திப் பிரிவு நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொள்ளலாமா? உங்கள் முகவரி தேடினேன்.. என் கண்ணுக்கு தென்படவில்லை.. ksajee@gmail.com இதற்கு ஒரு தனி அஞ்சல் இட முடியுமா?

6:20 AM, February 05, 2006